×

திண்டுக்கல் ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளர் நினைவு நாள்

திண்டுக்கல், டிச. 25: திண்டுக்கல் ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளர் வனஜா மறைந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் மண்டல அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் கலந்து கொண்டு மறைந்த வனஜா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன், அமைப்பு சாரா தொமுச செயலாளர் சுகுமாரன், மாவட்டத் தலைவர் மணிகண்டன், மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் விஜயா, சுப்புல்ட்சுமி, ரேவதி, மகேஸ்வரி, செல்லம்மாள், தேவி, வள்ளி ஒன்றிய நிர்வாகிகள் மலைச்சாமி, மணி, தொமுச நிர்வாகிகள் ஜேசு தங்கராஜ், பெருமாள், தங்கவேல் மற்றும் பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags : Dindigul Union ,DMK Women's Organizer Remembrance Day ,
× RELATED திண்டுக்கல் சீலப்பாடியில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்